×

விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணி

சேத்தியாத்தோப்பு, டிச. 18: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சேத்தியாத்தோப்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பேரணி நடந்தது. கிளாங்காடு விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியில் தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினாவை சேர்ந்த மாதாகுரு திரிபுரசுந்தரி, யுக கருடானந்தா சுவாமிகள் ஆகியோர் ராமர் கோயில் கட்டுவோம் என்ற கோஷம் ஒலிக்க, விஷ்வ ஹிந்து பரிஷத் சேவை பிரிவு மருத்துவர் ஜெயமுரளி கோபிநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கேபிடி இளஞ்செழியன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலையருகில் உள்ள கேபிடி திருமண மகால் வந்தடைந்தது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. நீதிமன்றத்தில் 8 ஆண்டுக்கும் மேலாக காலதாமதமாகி வரும் இவ்வழக்கு விவகாரத்தில் உடனடியாக இந்துக்களின் மன குமுறலையும், அவர்களின் தூய்மை போராட்டத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இனியும் காலதாமதப்படுத்தாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Tags : Vishwa Hindu Parishad ,
× RELATED ஞானவாபி கட்டிடத்தை ஒப்படைக்க வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை