×

வாகனம் மோதி முதியவர் பலி

வில்லியனூர், டிச. 18: வில்லியனூர் அருகே உள்ள தமிழக பகுதியான மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (73). கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவராந்தகம் சாராயக்கடையில் அளவுக்கு அதிகாமாக மது அருந்திவிட்டு அரியூர் - சிவராந்தகம் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...