×

லாரி, ஜேசிபி பறிமுதல் இருவர் கைது

திருச்சுழி, டிச. 18: நரிக்குடி அருகே, அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி மற்றும் ஜேசிபி வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். நரிக்குடி பகுதியில் நாலூர், கட்டனூர், மானூர், வீரசோழன் வழியாக கிருதுமால் செல்கிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நரிக்குடி காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் கமல்  ரயில்வே கிராசிங் பகுதியில் வாகனம் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மற்றும் ஜேசிபியை மடக்கினர். அவைகளை ஓட்டி வந்தவர்களை விசாரித்தனர். இதில், அவர்கள் சிவகங்கை மாவட்டம், மன்னன் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் லாரி டிரைவர் என்பதும், விருதுநகர் மாவட்டம், கோரைக்குளத்தைச் சேர்ந்த கார்த்தி ஜேசிபி டிரைவர் என தெரிய வந்தது. இவர்கள் இருவரும்  மானூர் பகுதியில் உள்ள கிருதுமால் நதியில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி, ஜேசிபியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Tags : Larry ,Jessie ,confiscation ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...