×

தமாகா ஊழியர் கூட்டம்

சாத்தூர், டிச. 18: சாத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், நகர துணைத்தலைவர் ஜோதிநிவாஸ், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கும்கி கார்த்திக் முன்னிலை வகித்தனர். மேற்கு வட்டார தலைவர் முத்துவேல், நகர பொருளாளர் சதீஸ்குமார், பொதுச்செயலாளர் ரவி, இளைஞரணி தலைவர் சதாம் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாத்தூர் வைப்பாற்று புதிய பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும். நான்கு வழிச்சாலை படந்தால் சந்திப்பில், சேதமடைந்த சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும். முக்குராந்தலில் இருந்து கேசிஎடி பல்க் வரை உள்ள மெயின் ரோடு, நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து அண்ணா நகர், குருலிங்காபுரம், முத்துராமலிங்கபுரம், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி வரை செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 27ம் தேதி சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tamana Employee Meeting ,
× RELATED தமாகா ஊழியர் கூட்டம்