மதுரை, டிச. 18: மதுரை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கன்வீனர் பொன்னுத்தாய் மற்றும் பெண்கள் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த புகார் மனு, ‘‘மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வு மாணவியை துறைத்தலைவர் கர்ணமகாராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாணவி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.