×

ஒட்டன்சத்திரத்தில் இன்று வதிலையில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரம், டிச.18: ஒட்டன்சத்திரத்தில் இன்றும், வத்தலக்குண்டுவில் நாளையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் மற்றும் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் நகர், லெக்கையன்கோட்டை,
புதுஅத்திக்கோம்பை, கே.அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, விருப்பாட்சி, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, காப்பிளியபட்டி, தங்கச்சியம்மாபட்டி, வெரியப்பூர்,
அம்பிளிக்கை, புலியூர்நத்தம் ஆகிய ஊர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை ஒட்டன்சத்திரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் (பொ) தெரிவித்துள்ளார். வத்தலக்குண்டு உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, ஜி.தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, மல்லனம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.  இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : resort ,Ostensham ,
× RELATED இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால்...