ஈரோடு,டிச.18: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா பட்டக்காரன்பாளையம் அருகே கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பெருந்துறை தாலுக்கா கணக்கம்பாளையம் பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாய கூலிகள். எங்களுக்கு இதர சொத்துகளோ, இடமோ கிடையாது. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.