ஆவடி, டிச.18: பட்டாபிராம், முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27), டிரைவர். கடந்த 15ம் தேதி இரவு சந்தோஷ் வேலை முடிந்து மின்சார ரயிலில் பட்டாபிராம் வந்தார். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்பகுதியில் உள்ள கோபாலபுரம் மெயின்ரோட்டில் வந்த அவரை 4 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். குடிபோதையில் இருந்த அவர்கள் சந்தோஷை சரமாரியாக உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிறகு படுகாயமடைந்த சந்ேதாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
.
புகாரின்படி, பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் சந்தோஷை தாக்கிய நபர்கள் தெரியவந்தது. பட்டாபிராம், தண்டுரை, பள்ளத்தெருவை சேர்ந்த சுரேஷ் (22), அதே பகுதி பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த குமார் (22), பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (22), பட்டாபிராம், வள்ளலார் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் என தெரியவந்தது. தலைமறைவான 4 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.