×

கஞ்சா விற்றவர் கைது

திருவேங்கடம், டிச.18:  குருவிகுளம் எஸ்ஐ அருள்மொழி மற்றும் போலீசார் வாகைக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். இதில் சுரண்டைஅருகேயுள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்த ராஜா என்ற அருணாசலம் (42) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.கல்லிடைக்குறிச்சியில்பெட்டி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலைஅம்பை: கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலம் அருகே  பழனி ஆண்டவர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத ஆண் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் அங்கு சென்ற கல்லிடைக்குறிச்சி போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில், தூக்கிட்டு இறந்தவர் வீரவநல்லூர் அழகியநம்பி முடுக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சுமணி (49)  என்பதும், பெட்டி கடை நடத்திவந்த இவர், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இவருக்கு மீனாட்சி  (44) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து பிச்சுமணி தம்பி வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ ஆதம் அலி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.மனைவியுடனான தகராறில்சங்கரன்கோவில் கோர்ட்டில் விஷம் குடித்த தொழிலாளிசங்கரன்கோவில்:  சங்கரன்கோவில் அடுத்த தலைவன்கோட்டையைச் சேர்ந்த சித்ரபுத்திரன், ராசாத்தி தம்பதி மகன் தங்கத்துரை (37). கூலி தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சங்கரன்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில் ஆஜராக வந்த தங்கத்துரை, கோர்ட் வளாகத்தில் நேற்று தான் கொண்டுவந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார், இதை பார்த்து பதறியதோடு அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நீதிமன்ற அலுவலர் சங்கரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : Cannara ,soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!