×

திருப்பாவை பயிற்சி வகுப்பு

வைகுண்டம், டிச.18: இந்து அறநிலை துறை ஆணையின் படி நவதிருப்பதிகோயிலில் கடைசிகோயிலான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் மற்றும் பண்னோடு பாடுதல் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. நிகழ்சியை இளைய வல்லி ஸ்ரீராம்சுவாமி தலைமை வகித்து பயிற்சியளித்தார். முன்னாள் அறங்காலர் குழு தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி விஸ்வநாத் விளக்க உரை அளித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் ஏராமானோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக திருப்பாவை புத்தகம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது