ஈரோடு, டிச. 16: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் திருவாதிரை விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாணிக்கவசாகர் வீதி உலா நடைபெற்றது. இந்த வீதி உலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 23ம் தேதி ஸ்ரீ நடராசருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசனமும், 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இதில் விசேஷ நாட்களில் மாணிக்கவாசகர், நடராச பெருமான், சிவகாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் காட்சியளிப்பார்.