×

வேதனையில் விவசாயிகள் ஊராட்சி முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சாயல்குடி, டிச.16:சிக்கல் ஊராட்சியின் முறைகேடுகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் முகம்மது இக்பால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாஜ்முகம்மது, மாவட்ட பொருளாளர் வாவாராவூத்தர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது. சிக்கல் ஊராட்சியில் நடைப்பெற்ற அரசு திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
சிக்கலில் இருந்து ஆண்டிச்சிக்குளம் சாலையில் தெருவிளக்கு அமைக்கவேண்டும், சிக்கல் இ.சி.ஆர் சாலையோரம் செல்லும் திறந்த வெளி கழிவுநீர் கால்வாயில் ஒருவர் தவறி விழுந்து உயிர்பலி ஏற்பட்ட பிறகும், அதனை மூட நடவடிக்கை எடுக்காதது, ஊராட்சியில் சுகாதாரகேடு நிலவி, தொற்றுநோய் பரவி வருகிறது. இதுபோன்று ஊராட்சியின் அலட்சிப்போக்கு கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டது.
இதில் மமக கட்சியின் அமைப்பு செயலாளர் கனி, துணை தலைவர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

Tags : Demonstrators ,misuse ,
× RELATED புகுஷிமா அணு உலை விபத்து: ஜப்பான்...