×

பட்டாசு தொழிலாளர் சங்கம் அறிவிப்பு மேகதாது பிரச்னையில் இரட்டை வேடம்

சாத்தூர், டிச. 16: சாத்தூர் சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியின்  வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்  கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்  கமிட்டி தலைவர் தளவாய்பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டிச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான மாணிக்தாகூர்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறுகையில், ‘ரபேல் போர் விமான ஊழல் வழக்கை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்ட குழு விசாரணை செய்தால்தான் ஊழல்  தொடர்பான முழு விவரத்தையும் வெளி கொண்டு வர முடியும். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி  பெற்று ராகுல்காந்தி பிரமராக வருவார் என்று தெரிவித்தார்.மாணிக்தாகூர்  கூறுகையில், ‘கர்நாடாகவில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்த விவகாரத்தில்  தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழக காங்கிரஸ் பொறுத்து கொள்ளாது. இந்த விவகாரத்தில் அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் இரட்டை வேடம்  போடுகின்றன என்று தெரிவித்தார். பேட்டியின்போது இளைஞர் காங்கிரஸ் கிழக்கு  மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.


Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...