×

குடிநீர் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் பொதுமக்கள் அவதி விரைவில் சீரமைக்க கோரிக்கை

கரூர், டிச. 16: குடிநீர் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினை சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.கரூர் ஜவஹர் பஜார் அருகே கூத்தரிசிக்காரத் தெரு உள்ளது. இந்த தெருவில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த தெருவில் குடிநீர் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடப்படாமல் சென்று விட்டனர்.இதன் காரணமாக, பள்ளி மாணவிகள் உட்பட பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இதனை சீரான முறையில் மூடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : shutdown ,
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...