×

தென்னைமரம் விழுந்து 3 வயது சிறுவன் பலி

திருவள்ளூர், டிச.16: திருவள்ளூர் அருகே காற்றில் தென்னை மரம் விழுந்ததில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வாசு(38). இவரது மகன் சஞ்சய்(3). இவன், நேற்று மாலை 4 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது, பலத்த காற்றடித்ததில், எதிர்பாராத விதமாக வீட்டின் வெளியே இருந்த தென்னை மரம் திடீரென வேரோடு பெயர்ந்து விழுந்தது. இதில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சஞ்சய், தென்னை மரத்தின் அடியில் சிக்கியதால், உடல் நசுங்கி அலறினான். இவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சிறுவனை மீட்பதற்குள், சம்பவ இடத்திலேயே பலியானான். தகவலறிந்து வந்த வெள்ளவேடு போலீசார்,  சஞ்சயின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...