×

கடல் சேற்றில் சிக்கிய புஷ்பவனம் கிராமம்

வேதாரண்யம்,டிச.12: வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் கிராமத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் வேளாண் பொறியியல் துறை பணியாளர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் சார்பில் நடைபெற்று வரும், புயலின் போது ஏற்பட்ட அலையின் சீற்றத்தால் கரைக்கு தள்ளப்பட்டுள்ள சேற்றினை அப்புறப்படுத்தும் பணியினை பார்வையிட்டார். புயலின் தாக்கத்தால் கரைப்பகுதியில் வெகுதூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை தகுந்த இயந்திரங்கள் மூலம் உரிய இடத்திற்கு கொண்டு வரவும், பகுதியாக சேதமடைந்த படகுகளை விரைவில் சரிசெய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீன்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் புஷ்பவனம் மீனவ கிராமத்திலுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அங்குள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் கூறினர்.

Tags : Pushpavanam ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...