×

மாயனூர் சாலையை சீரமைக்க வேண்டும்

கரூர்,டிச.12:  மாயனுாரில் இருந்து அம்மா பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதும்ககள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டம் மாயனுாரில் இருந்து தடுப்பணை வழியாக நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டம் பகுதிகளுக்கு தடுப்பணை வழியாக சாலை வசதி உள்ளது. இதே போல், தடுப்பணை அருகே அம்மா பூங்கா கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மீன்மார்க்கெட் வளாகமும் இங்கு செயல்பட்டு வருகிறது. மீன் மார்க்கெட், அம்மா பூங்கா போன்ற பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக் கணக்கானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் மாயனுார், கரூர் போன்ற பகுதி களில் தடுப்பணை வழியாக காட்டுப்புத்துார், சீப்பிலாபுத்துார், ஏழரைபட்டி, மோகனுார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ் வசதியும் உள்ளது.

இந்நிலையில், மாயனுார் ரயில்வேகேட் பகுதியில் இருந்து தடுப்பணை வரையிலுமான சாலை மிகவும் மேடு பள்ளமுமாக நடந்து செல்லவே முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை மேம்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.  இந்த சாலையை மேம்படுத்திட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த சாலையை மேம் படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு செய்து தர வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Mannur ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி