×

,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரொக்க பரிசு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், டிச. 12:  1,330 திருக்குறள் ஒப்பிவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசாக வழங்கப்படு உள்ளதால் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 1,330 குறட்பாக்களையும் ஒப்பிவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறமையுடைய மாணவ, மாணவிகள் இருப்பின், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Tags : recruits ,
× RELATED வேலைவாய்ப்பு திருவிழாவின்கீழ் 51,000...