×

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.12: சம்பளம் வழங்காததை கண்டித்து, தர்மபுரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாலை கறுப்பு துணியால் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தர்மபுரி தொலைதொடர்பு மாவட்டத்தில் 300 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். இதில் தர்மபுரி பிஎஸ்என்எல்லில் மட்டும் 93 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், தொலைதொடர்பு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நவம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் கருப்பு துணியால் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சௌந்தரராஜன், நிர்வாகிகள் ராஜா, பழனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாதந்தோறும் சம்பளத்தை முதல்வாரத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : BSNL ,contract employees ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...