×

மதுரையில் பரபரப்பு எம்.கல்லுப்பட்டி அரசுப்பள்ளி மாணவி டேக்வாண்டோவில் மாநில அளவில் முதலிடம்

உசிலம்பட்டி, டிச. 12: எழுமலை அருகேயுள்ளது எம்.கல்லுப்பட்டி. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது மாநில அளவில் காங்கேயத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 14 முதல் 16 கிலோ எடை பிரிவில், டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி செண்பகம் (14) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். மேலும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாமவி டானா (12) சிலம்பம் போட்டியில் மூன்றாவது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவி செண்பகத்தை ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Madurai ,government school student ,M. Kallupatti ,state ,Texas ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...