×

அம்மாபேட்டை அருகே குடிசை வீட்டிற்கு தீ வைத்தவர் கைது

பவானி, டிச. 12:  பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகேயுள்ள ஜி.ஜி., நகரை சேர்ந்தவர் சரவணன் (37). டிரைவர். இவருக்கு கலா (28) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி சரவணன் வேலைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் கலா மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த கலா, குழந்தைகளுடன் வெளியேறி உயிர் தப்பினார். இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூர் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால் குடிசை வீடு எரிந்து சாம்பலானது. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து குருவரெட்டியூரை அடுத்த தண்ணீர்பந்தல்பாளையத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் சண்முகம் (43) என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சரவணன் சண்முகத்தின் உறவினர் என்பதும், சண்முகம் மனைவி பிரிந்து செல்ல சரவணன் காரணமாக இருந்ததால், அவரது வீட்டுக்கு தீ வைத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சண்முகத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : firecracker ,Mamtapet ,
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு