×

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

திருவொற்றியூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம் ஈஸ்வர் (55). சென்னை எண்ணூர் நேதாஜி நகரில் உள்ள தனியார் கன்டெய்னர் யார்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், அதே பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, காய்கறி செடிகளுக்கு நடுவில் ராம் ஈஸ்வர் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது. இதனையடுத்து, ராம் ஈஸ்வரை போலீசார் கைது செய்து, கஞ்சா செடியை அழித்தனர்.

Tags :
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...