×

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் புகார் நில அபகரிப்பு செய்ய முயன்றதாக அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

திருப்போரூர், டிச. 12: கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவர் கொடுத்த புகாரின்படி, அதிமுக பிரமுகர் மீது, நில அபகரிப்பு செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான நாவலூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவரது கணவர் நடராஜன். இவர்களது மகன் சதீஷ். கடந்த 10ம் தேதி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் சென்ற சாந்தகுமாரி, தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டனர். இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். விசாரணையில், நாவலூரில் உள்ள தங்களது பூர்வீக சொத்தை அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான நாவலூர் ரகு, அவரது தம்பி ராஜா உள்ளிட்டோர் தங்களது சொத்தை அபகரிக்க முயல்வதாக புகார் கூறினர்.

புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார். இதையடுத்து தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ குமார் ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்ததாகவும், மதில்சுவரை சேதப்படுத்தியதாகவும் ஜெயலலிதா பேரவை திருப்போரூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான நாவலூர் ரகு, அவரது தம்பி ராஜா, டில்லி மற்றும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : AIADMK ,landlord ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...