×

ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீப விழாவை ஒட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம், டிச. 12: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 10 ஆயிரம் விளக்கேற்றி நெய் தீபம் போட்டு பெண்கள் வழிபட்டனர். இதில் மாவட்ட நீதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தினந்தோறும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்மனையும் தரிசித்து செல்கின்றனர்.  இந்த கோவியில் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமரம் உள்ளது. அந்த மாமரத்தை சுற்றி வழிபட்டு செல்கின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் லட்ச தீப விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதனை முன்னிட்டு மூலவர் ஏகாம்பரநாதருக்கும், ஏலவார் குழலி அம்மனுக்கும் 108 சங்காபிஷேகம் நடந்தது.

லட்ச தீபத்தையொட்டி கோயில் உள்பிரகாரத்தில், 10 ஆயிரம் அகல் விளக்கில் நெய் தீபம் போட்டு, பெண்கள் குடும்பத்துடன் மனமுருகி சிவபெருமானையும், ஏலவார் குழலி அம்மனையும், வழிபட்டனர். இந்த லட்ச தீப விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி கருணாநிதி, தொழிலதிபர் ஆர்.வி.ரஞ்சித்குமார், கோமதி சில்க்ஸ் பட்டு தொழிலதிபர் வி.கே.தாமோதரன், எம்.எம்.ஹோட்டல் அதிபர்கள் அண்ணாமலை, இன்பசேகரன், பன்னீர்செல்வம், சோழன் கல்வி குழும சேர்மன் சஞ்சீவி ஜெயராம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர். பிறகு பக்தர்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

Tags : worshipers ,festival ,Lakshafa ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...