×

தனித்தனி சம்பவம் ரயிலில் அடிபட்டு முதியவர்கள் பலி

புவனகிரி, டிச. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : incident ,victims ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...