×

குளத்தூர் கிழக்கு கடற்கரைசாலையில் ஊர் குறித்து அறிவிப்பு பலகை இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

குளத்தூர்,டிச.11: குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குளத்தூர் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ராமேஸ்வரத்திலிருந்து திருச்செந்தூர், கன்னியாகுமரி செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். குளத்தூரிலிருந்து மேற்கு நோக்கி பிரியும் நெடுஞ்சாலை பகுதியில் ஊர் வழிகளை குறிக்கும் அறிவிப்பு பலகைகள் இல்லாததால்  இரவு நேரங்களில் எந்தவழியில்  செல்வது என தெரியமால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.   மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் இச்சாலை வழியாக சைக்கிள், பைக் மூலமாகவும் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள்  இரவு நேரங்களில் வழி தெரியாமல் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து வேடநத்தம் வழியாக குறுக்குச்சாலை நான்கு வழிச்சாலையை இணைக்கும் சாலைவழியாக சென்று  தடுமாறுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கிராமபகுதி முழுவதும் இருளாக இருப்பதால்  வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் ஊர் வழி அறிவிப்பு பதாகைகள் மற்றும் சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : motorists ,town ,Kuttur East Coast ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது