×

பரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணி

செம்பனார்கோவில்,டிச.11: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து பரசலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நூறு நாள் திட்டத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. செம்பனார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், மனோகர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நூறுநாள் திட்டத்தில் பரசலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தனூர், மேலக்கட்டளை, மகாராஜபுரம், பரசலூர், குறிஞ்சிதோட்டம், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் உழவார பணிகள் நடைபெற்றது. அதன்படி கிராமபுறங்களில் உள்ள வயல்கள், கன்மாய்கள், குளங்கள், குட்டைகள், சாலை ஓரங்களில் உள்ள செடிகள், கோயில் முகப்பில் உள்ள செடிகள், கொடிகளை அகற்றி துப்புரவு செய்தனர். மேலும் அதில் திடக்கழிவு, மேலாண்மை கீழ் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து எடுத்து அப்புறப்படுத்தினர்.இதில் பணி தள அலுவலர் அருண், ஊராட்சி செயலர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : town ,Barasalur ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி