×

டூவீலர் மோதி வக்கீல் பலி

திருமங்கலம், டிச. 11: பேரையூரை சேர்ந்தவர் வக்கீல் மருதுபாண்டி(35). இவர் நேற்று மதுரையில் இருந்து இரவு டூவீலரில் பேரையூர் வந்து கொண்டிருந்தார். கப்பலூர் டோல்கேட் அருகே வந்த போது எதிரே ஒரு டூவீலரில் வந்த இருவர் மருதுபாண்டி வாகனத்தில் மோதினர். இதில் சம்பவ இடத்திலேயே மருதுபாண்டி தலையில் அடிபட்டு உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்த போது, எதிரே டூவீலரில் வந்தவர்கள், சிவகாசி தாயில்பட்டி மாரீஸ்குமார்(24), கப்பலூர் லோகநாதன்( 22) எனத்தெரிய வந்தது. படுகாயமடைந்த அவர்களுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

Tags : Tuweiler ,lawyer ,
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது