×

காரைக்கால் பகுதியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

காரைக்கால், டிச.7: காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (7ம் தேதி) மின் விநியோகம் இருக்காது எனமாவட்ட மின்துறை அறிவித்துள்ளது.இது குறித்து, காரைக்கால் மாவட்ட மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: காரைக்கால் மாவட்டத்திற்கு, நெய்வேலியிலிருந்து நேரடி மின்சாரம் பெற காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தில் 230 கே.வி. லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் ஓர் அங்கமாக இன்று(7&12&18) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், இன்று (7ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, காரைக்கால் நண்டலாறு முதல் காரைக்கால் மதகடி வரை(சுமார் 10 கிலோ மீட்டர்) மற்றும் பூவம், மண்டபத்தூர், அக்கம்பேட்டை, வரிச்சிக்குடி, கோட்டுச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, பிள்ளைத்தெருவாசல், தருமபுரம், புதுத்துறை, உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electricity shutdown ,Karaikal ,area ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...