கரூர்,டிச.7: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் திருச்சி பைபாஸ் சாலையோரம் உடைந்த நிலையில் உள்ள வடிகால் நடைபாதை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டம் திருக்கம்புலியூர் பகுதியில் இருந்து கிருஷ்ணராயபுரம் வரை சாலையின் இரு புறமும் நடந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சாக்கடை வடிகால் மீது சிமெண்ட் பலகைகள் வைத்து நடை பாதை அமைத்து தரப்பட்டுள்ளது. கரூர்- திருச்சி பைபாஸ் சாலையில் இந்த பகுதி வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகன ங்கள் இந்த சாலையின் வழியாக சென்று வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ளதால், கடந்த பல மாதங்களாகவே பெரும்பாலான இடங்களில் நடை பாதையில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் எளிதாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் இதன் வழியாக நடந்து செல்ல மிகவும் அஞ்சி வருகின்றனர்.இந்த நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் அதிகாரிகளிடம் கோரி க்கை வைத்துள்ளனர். எனவே, இந்த நடைபாதையை சீரமைத்து தருவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.