×

பாலக்கரை இருதயபுரம் மாநகராட்சி மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும் ஆணையருக்கு கோரிக்கை

திருச்சி, டிச.7: ஐக்கிய மக்கள் நல கழகம் சார்பில் மாநில துணை தலைவர் காளிமுத்து, திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், திருச்சி பாலக்கரை மேம்பாலத்தின்கீழ் மாநகராட்சி சார்பில் நடைபாதை பூங்கா பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதி பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் வருகின்றனர். அங்கு பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திட வேண்டும். பாலக்கரை இருதயபுரம் (ஞானதிக்கம்பிள்ளை) பெயரில் மாநகராட்சி மருத்துவனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிபட்டு வருகின்றனர். எனவே நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : physician ,Commissioner ,hospital ,Palakkad ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...