×

தமுமுக. ஆர்ப்பாட்டம்

ஊட்டி, டிச. 7: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தமுமுக., மமக., சார்பில் சார்பில் ஊட்டியில் பாசிச எதிர்ப்பு நாள் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தமுமுக., மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை வகித்தார். சி.பி.எம்., மாநில குழு உறுப்பினர் பத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக., மாநில துணை செயலாளர் அப்தூர் ரகுமான் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பாசிச எதிர்ப்பை வலியுத்தி கோஷங்கள் எழுப்ப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். டவுன் டி.எஸ்.பி., திருமேனி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : NRC ,Demonstration ,
× RELATED ‘நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்’...