×

விபத்தில் அதிரடிப்படை காவலர் பலி

சத்தியமங்கலம், டிச. 7: சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையயத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(38). சத்தியமங்கலத்தில் உள்ள அதிரடிப்படை பிரிவில் தலைமைக்காவலர். இவர் நேற்றுமுன்தினம் இரவு சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அதிரடிப்படை முகாமிலிருந்து கொண்டப்பநாயக்கன்பாளையத்திற்கு  பைக்கில் சென்றார். அப்போது, முகாமை விட்டு வெளி தார்சாலைக்கு வந்தபோது பைக்கின் முன்சக்கர டயர் பஞ்சர் ஆனதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆறுமுகம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இறந்த காவலர் ஆறுமுகத்திற்கு யமுனா என்ற மனைவியும், நீத்து, பிரணிதா என 2 பெண்குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : commander ,accident ,
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...