×

மாநில ஜூனியர் வாலிபால் போட்டிக்கு 24 மாணவ, மாணவிகள் தேர்வு

திருவண்ணாமலை, டிச.7: திருவண்ணாமலையில் நேற்று நடந்த மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டிக்கான தேர்வில், 24 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மாநில கையுந்துப்பந்து கழகம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 10ம் தேதி வரை, சென்னையில் மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. இதற்கான மாணவ, மாணவிகள் தேர்வு நேற்று(வியாழன்) காலை 8 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.       

இத்தேர்வு போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 50 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 24 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை மாவட்ட வாலிபால் பயிற்றுனர் ஆ.முனுசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமாரசாமி, பாபு, நேரு, கணபதி, ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட 24 மாணவ, மாணவிகளும் இன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...