×

பால் குடித்தபோது மூச்சுத்திணறி 3 மாத குழந்தை பரிதாப சாவு

சென்னை, டிச.7:   சென்னை ராயபுரம் பழைய ஆடுதொட்டியை சேர்ந்தவர் வினோத்பாபு (25). இவரது மனைவி சந்தியா (22). இவர்களுக்கு 3 மாதத்தில் ஆனந்த் என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு குழந்தை அழுதுள்ளது. இதனால் சந்தியா குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, பரிதாபமாக இறந்தது. இதை பார்த்து சந்தியா கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் 20 நாட்களே ஆன பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்றுவிட்டு பால் குடித்தபோது மூச்சுத் திணறி இறந்ததாக நாடகமாடினார். பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அதுபோல் இந்த சம்பவமும் நடந்ததா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவரும்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...