×

திருவாடானை அருகே மயானம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை, டிச. 6: திருவாடானை அருகே உள்ள கீழ அரும்பூர் கிராமத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். திருவாடானை அருகே கீழ அரும்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சுமார் 60 குடும்பங்களுக்கு சாலை வசதியுடன் மயானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த நிலையில், தற்போது இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் இறந்த ஒரு பெண்ணை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம பொதுமக்கள் மயான ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.

கீழ அரும்பூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியம் மற்றும் அன்பழகன் கூறுகையில், எங்களது முன்னோர்களை இதே மயானத்தில் அடக்கம் செய்து உள்ளோம். அதன் பின்னரும் இதே மயானத்தில் தொடர்ந்து அடக்கம் செய்துவரும் நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் உடலை அடக்கம் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே தாசில்தாரிடம் ஆக்கிரமிப்பு அகற்ற மனு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : graveyard ,Thiruvatanai ,
× RELATED தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதி