×

கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, டிச.6: கெங்கவல்லி போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.கெங்கவல்லி அருகே, கூடமலை ஊராட்சியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அருள்பாண்டியன்(23). அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகள் கௌசல்யா. இவர், நெல்லை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி படித்து வருகிறார். இதனிடையே, அருள்பாண்டியன்-கௌசல்யா ஆகியோரிடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதற்கு இருவீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று சென்னையில் இருந்து வந்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். எஸ்ஐ சிவசக்தி, இருதரப்பு பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தி, ஜோடியை அனுப்பி வைத்தனர். 

Tags : Kangavalli ,
× RELATED கெங்கவல்லியில் உரிய ஆவணமில்லாத 5 வாகனங்கள் பறிமுதல்