சேந்தமங்கலம், டிச.6: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொல்லிமலை செம்மேட்டில் அதிமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான மாதேஸ்வரி அண்ணாதுரை தலைமையில் அதிமுகவினர் செம்மேட்டில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவ படத்திறகு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் லேம்ப் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் துரைசாமி, பேரவை செயலாளர் வர்ணன், முன்னாள் பெருந்தலைவர் துரைசாமி, மகளிரணி செயலாளர் பாலாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடேசன், ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னதுரை, நடராஜ், பால் கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சிவானந்தன், முருகேசன், மங்லேஸ், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராஜமாணிக்கம், பொன்னுசாமி, முருகேசன், சிவா உட்பட அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.