×

கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் திறந்து கிடக்கும் குடிநீர் தொட்டியால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர்,டிச. 6: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருச்சி சாலையில் மாயனூர் பகுதியை தாண்டியதும் கிருஷ்ணராயபுரம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் வந்து செல்லும் பொதுமக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகம் முன்பாக மினி குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வேலை நிமித்தமாக அலுவலகம் அனைவரும் இந்த டேங்கில் வரும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டி மூடி இல்லாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால், பொதுமக்கள் அசுத்தமான தண்ணீரைத்தான் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். மேலும் இந்த அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் தொற்று நோய் வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மூடி வைக்கும் வகையில் மூடி ஏற்பாடு செய்து வைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் தொட்டியை மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,epidemic ,office ,Krishnarayapuram Taluk ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...