×

புலியூர் அருகே ஆபத்தான வளைவு பாதையில் விபத்து அபாயம் பேரிகார்டு வைக்க கோரிக்கை

கரூர்,டிச. 6: கரூர் மாவட்டம் புலியூர் அருகேயுள்ள ஆபத்தான வளைவு பாதையில் அடிக்கடி நடைபெறும் விபத்தினை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை  விடப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து திருச்சி பைபாஸ் சாலை உள்ள வீரராக்கியம் செல்லும் சாலை உள்ளது. கரூரில் இருந்து திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுககு செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த சாலையின் வழியாக சென்று வருகிறது.இந்த சாலையின் தனியார் நிறுவன சிமெண்ட் பேக்டரி பின்புறச் சாலை மிகவும் ஆபத்தான வளைவு பாதையாக உள்ளது. பலமுறை இந்த சாலையில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. மிகவும் ஆபத்தான வளைவு கொண்ட இந்த பாதையில் அனைத்து வாகனங்களும் அதிக வேகத்துடன்தான் கடந்து செல்கிறது. இதனால், அவ்வப்போது விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில், வளைவு பாதைக்கு முன்பாக, பேரிகார்டு போன்ற பாதுகாப்பு அம்சங்களை வைத்து, வாகன ஓட்டிகளை அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு விபத்தினை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர துரிதமாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : risk trail ,Puliyur ,
× RELATED புலியூர் பேரூராட்சி புரவிபாளையம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி