×

பணி முழுமை அடையாமல் அதிகாரிகள் திணறல் திருமங்கலம் ரயில்நிலையத்தில் பிளாட்பார பராமரிப்பு பணி மந்தம்

திருமங்கலம், டிச. 5: திருமங்கலம் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணி மந்தமாக நடப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
திருமங்கலம் ரயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில், இரண்டாம் பிளாட்பாரத்தில், முக்கிய ரயில்கள் வந்து செல்கின்றன.
இந்த பிளாட்பாரத்தை புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பிளாட்பார கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. பிளாட்பாரம் குண்டும், குழியுமாக இருப்பதால், ரயிலை பிடிக்க அவசரமாக செல்லும் பயணிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இந்நிலையில், பிளாட்பாரம் அமைக்கும் பணி மந்தமாக நடப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.எனவே, அதிக பயணிகள் வரும் இரண்டாம் பிளாட்பார பராமரிப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : train station ,Tharamangalam ,
× RELATED மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே...