பழநி, டிச. 5: நாளை பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ஐ முன்னிட்டு பழநி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாளை பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பஸ் நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பலத்த போலீஸ் போடப்பட்டு தீவர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் அதிகளவு பக்தர்கள் வரும் கோயிலான பழநி கோயிலுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழநி ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்து வருகின்றனர். ரயில் நிலைய வளாகத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை வெளியேற்றினர். இதேபோல் பஸ்நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.