அறந்தாங்கி, டிச.5 : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் முத்தமிழன் தலைமையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும் முறையாகவும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் கலைமுரசு பேசினார். பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.