×

குடிநீர் கேட்டு கந்தர்வகோட்டை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டையில் இந்திரா நகர் அருகே கறம்பக்குடி சாலை, புதுமாரியம்மன் கோயில் பகுதியில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கஜா புயல் தாக்கியதிலிருந்து  கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று  கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரி மூலம் உடனடியாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Union ,Gandharvatte ,
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...