×

திருத்தணி அருகே ஏரியில் அழுகிய ஆண் சடலம்

திருத்தணி, டிச.5: திருத்தணி அருகே ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அவரை யாராவது அடித்து கொன்று சடலத்தை வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருத்தணி அடுத்த வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்டது வெங்கடாபுரம் கிராமம். இங்குள்ள ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில்  போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்து கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கூறுகையில், அழுகிய நிலையில் சடலமாக கிடந்த ஆணுக்கு சுமார் 50 வயது இருக்கும். இரண்டு கால் பாதங்கள் இல்லை.  இடது கையில் சாந்தி என்ற பெயர் பச்சை குத்தியிருந்தது, லுங்கி அணிந்திருந்தார். சடலம் அழுகி அடையாளம் தெரியாத வகையில் எலும்புகூடுகள் தெரிவதால், அவர் இறந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிய இருக்கலாம்.

எனவே,  அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர். யாராவது அவரை சென்னை புறநகரில் இருந்து கடத்தி கொலை செய்து சடலத்தை அங்கு போட்டு சென்றார்களா அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா என்பது உள்பட பல கோணத்தில் விசாரிக்கிறோம். ‘மேலும், காணாத போனவர்களின் பட்டியலையும் சேகரிக்க உள்ளோம். பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவரும் என்றார்.  

Tags : lake ,Tiruttani ,
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...