பொன்னமராவதி,டிச.4: பொன்னமராவதி அருகே சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மதுரையில் 46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி மற்றும் கணித கண்காட்சியில் சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆசிரியர் கோபாகிருஷ்ணனை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா, இலுப்பூர் டிஇஓ குணசேகரன், தலைமையாசிரியர் குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.