×

திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் துவங்கிய மழையால் புயல் மீட்பு பணிகள் பாதிப்பு

திருவாரூர், டிச.4: திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் துவங்கியுள்ள மழை காரணமாக  கஜா புயல் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கஜா புயலின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டத்தில் கிராம பகுதிகளில்  கடந்த 15ந் தேதி நள்ளிரவு முதல் நேற்று வரையில் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (4ந் தேதி)  முதல் மீண்டும் மழை  பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதையடுத்து  திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதலே மழை  பெய்ய துவங்கியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில்  மின் விநியோகத்தை சரி செய்யும் பணிகள் மற்றும் மரங்களை அகற்றும் பணிகள்  உட்பட பல்வேறு மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு  வருகின்றன.

Tags : Storm rescuers ,floods ,Thiruvarur district ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...