×

கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் கோர்ட்டில் வழக்கறிஞர் சாட்சியம்

நாமக்கல், டிச.4: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் பார்த்திபன் நேற்று சாட்சியம் அளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், சாட்சிகள் விசாரணை கடந்த 3 மாதமாக, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 12வது நாளாக சாட்சிகள் விசாரணை, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் பார்த்திபன், நேற்று சாட்சியம் அளித்தார். அவரிடம் அரசு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், பார்த்தீபனிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இதையடுத்து நீதிபதி இளவழகன், வரும் 12ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags : Gokulraj ,court ,Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை