போச்சம்பள்ளி, டிச.4: கல்லாவி அருகே தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. கல்லாவி அருகே செங்கழுநீர்ப்பட்டி கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துமனை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். விழாவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜ், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல்அமீது, நகர செயலாளர் சிவானந்தம், வேங்கன், முருகேசன், முருகன், டாக்டர்கள் ராஜேஷ், சுப்பிரமணி, கால்நடை ஆய்வாளர் செல்வன், முருகேசன், ஐயப்பன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.