×

திருவாலங்காடு ஒன்றியங்களில் அமமுக ஆலோசனை கூட்டம்

திருத்தணி, டிச.4: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள மணவூர், சின்னம்மாபேட்டை, கனகம்மாசத்திரம் மற்றும் ஆற்காடுகுப்பம், என்என்.கண்டிகை ஆகிய பல பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில், ஒவ்வொரு வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த தினத்தை கொடியேற்றி கொண்டாடுவது, ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவருடைய நினைவிடத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். அனைத்து கூட்டங்களுக்கும், ஒன்றிய செயலாளர் ஜெயதேவன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் அண்ணாதுரை, இளைஞர் பாசறை செயலாளர் கோபி முன்னிலை வகித்தனர். ஒன்றிய மகளிரணி செயலாளர் மனோகரி, துணை செயலாளர் ஆனந்தி, ஊராட்சி செயலாளர்கள் பாபு சங்கர், சரஸ்வதி, செயலாளர்கள் முனிரத்தினம், அருவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Amruthi ,consultation meeting ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...